இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!
  • முள்ளிவாய்க்காலிலிருந்து...


    ஒரு நூறு தெரு
    தள்ளி தான்
    கேட்கிறதந்த சப்தம்;

    கண்ணீரால் யாரையோ
    கூப்பாடு போட்டழைக்கும்
    ஒரு ஓலம் அது;
    சுலபமாய் சொன்னால்
    மரணம் எனலாம்,

    வாழ்பவன்
    கற்றும் தெளியாத
    அல்லது -
    கற்காத பாடம்.

    மரணம் என்றாலே
    நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு
    மரணமின்றியே இயங்குகிறது
    நிறைய சதைகள்;

    ஆம், ஜாதி பேசி
    மதம் பேசி
    இனம் பேசி
    ஏற்றத் தாழ்வு பேசி
    யாரை கொன்றேனும்
    சுயநலம் காக்கும் சதைகளாக தானே
    வாழ்கிறோமென சொன்னால்
    எத்தனை பேர் ஏற்பீர்களோ
    எத்தனை பேர் மறுப்பீர்களோ;
    மறுக்க உங்களுக்கு
    சுதந்திரமுண்டு -
    ஏற்க எனக்கு மனமில்லை - நீங்கள்
    சதைகளே;
    சதை குவிந்த ஒரு பிண்டமே;
    வேண்டுமெனில்
    பிணமென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

    டேய்........, யாரையடா
    பிணமென்றாய்' என
    விரட்டி பின்னால் ஓடுகிறேன்..

    என்னை விட வேகமாக ஓடி
    முட்கம்பிகளை தாண்டி
    முள்ளிவைக்காளின் ஒரு
    ரத்தக் கரை படிந்த பாறைக்குள் சென்று
    மறைகிறதந்த உருவம்!

    வித்யாசாகர்

0 comments:

Leave a Reply

கரும்புலி மறவர் களத்திலே உண்டு

john cena

சிறப்புச் செய்திகள்

சிறப்புச் கட்டுரை

john cena

கவிதை

john cena

படங்கள்

வீடியோ

வரலாறு

Blogger இயக்குவது.