-
பாயும் ஊகம்

கணப்பொழுது அடிமனதிற்
கருத்துடனே எடுத்திடுவாய்
நிணரத்தம் பாயும்பூமி
நித்தம் நித்தம் சாகும் மக்கள்
பணம் பதவி பார்த்திடாமல்
பைந்தமிழைக் காத்திடவே
குணக்குன்றாம் வீரன் நீயும்
குதித்தோடி வந்திடுவாய்
விளக்கற்ற இரவும்
விடியலற்ற கனவும்
வீறுகொண்ட மைந்தன் நீயும்
விடியல்தன்னை நோக்கித்தானே
வகுத்ததொரு பாதையிலே
வெற்றி நடை போடக்கண்டு
வெந்து நொந்தார் வீணரவர்
விழுப்புண்பெற்றாய் வீரன் நீயும்
அறுவடை செய்யும் தம்பின் களத்தில்
அரசியற் சாணக்கிய தம்பிமார்கள்
பொறுமையைத்தான் இளக்காத பொற்கொடிகள்
போர்தனிலே பாய்ந்து சென்று களமாடச்
சிறுமையே உருவான சிறுமதியோர்
சிதறுண்டோடிச் சின்னாபின்னம்
குறுநிலத்தின் மன்னனைபோற் தம்பி
கோலோச்சும் காட்சி என்னே!!!
ஆசை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



0 comments: