தாய்மண் மீது உறுதி

கண்களை கசக்குவதால்
காலத்தை கடிந்து கொள்ளமுடியுமா.
காலமிட்ட கோலமென
கலங்கிப்போக முடியுமா.? எம்
ஒவ்வொருதுளி கண்ணீருக்கும்
வரலாற்று ஈரமுண்டு
வரண்டு நீ போகாதே.
சரித்திரப்புரிசர்கள் சங்கமிப்பது அழிவதற்கல்ல.
நீண்ட வரலாறு கொண்டவர்கள் நாம்
அதை நினைவில் வைத்திரு.
முள்ளிவாய்க்கால் தமிழருக்கு
முற்றுப்புள்ளி என்கிறது சிங்களம்.
எதுவும் முடிந்துவிடவில்லை அங்கு
சிங்களத்தின் சாவுமணித்தூணின்
அத்திவாரமது. எம்
கண்ணீரை உரமாக்குகின்றோம்.
கருகிய நாட்களுக்கு
குறுகிய நாட்களில் பதில்வரும்
நாளை நமதே நாடு நமதே.
சோகம் அறவே. ஈழம்வருதே.
என புதுப்பல்லவி பாடு.
கண்களை குத்திவிட்டு
கனவுகாண முடியாது.
எம் இனம் எம் நிலம்
அடிமைப்பட்ட சரித்திரம் கிடையாது
நாம் சறுக்கிவிழவில்லை
எம் சரித்திரத்தை சுறுட்டிவிட
விரிக்கப்பட்ட சதிவலையிது.
கதைமுடிவில் சரித்திரம் படைப்பது
யாரென்பது புரியும்.
விலை கொடுத்து வாங்கிய வீணர்களுக்கு
விசம் கொடுத்து வளர்க்கின்றாய்
இனம் என்பதை மறந்து
உன் நிழலுக்கு படுகுழி தோண்டுகின்றாய்.
காலத்தின் தீர்ப்புக்கு நீ
தப்பிக்கொள்ள முடியாது.
இன்றும் சரி என்றும் சரி
உன்கணக்கு பிழையானது.
தீவுக்குள் முடங்கிவிட்டோம்
தீர்வுக்குள் அடங்கிவிட்டோம். என
பெருமிதம் கொள்ளாதே.
நாடுகடந்த நாரைகள் நாம். உன்
கூரையில் ஓர்நாள் கல்லெறிவிழும்
போர்த்திறன் தெரியாதவகள் என
எம்மை கேலி செய்கின்றாய்.
களம்கண்டு கலங்காத எம்
கருமணிக் குஞ்சுகள்
பிணமெனக் குவிந்தது அங்கே.
மனம் வந்து கொன்றாயோ
மாந்தைகள் ஆட்டம். அங்கே
மௌனித்த துப்பாக்கிகள்
மறுவெடி தீர்த்திருந்தால்
உன் கெதி எப்படி.
கோழையே...........
கொன்றது நீ வெல்வது நாம்
எம் மௌனம் வானத்தை இடித்து
மின்னலாய் வந்து விழும். அப்போ
உன் தலை தெறிக்கும்.
புலி உயிர்த்தஞ்சம் கேட்டதில்லை
சாவுக்குப் பயந்ததில்லை
யாருக்கும் அடிமையில்லை
பகையென்றால் விடுவதில்லை
மண்டியிட்டால் தொடுவதில்லை
குழிபறித்தால் மன்னிப்புக்கு இடமில்லை
கூடவே இருந்துவிட்டால்
யாருக்குமே அச்சமில்லை.
உன் நெஞ்சுக்கு துணிவிருந்தால்
நேருக்குநேர் நின்றுபார்.
உயிர்தப்பி ஓடினோர் எத்தனை பேர்
அவர்களை கேட்டுப்பார்.
யாரடா நீ எனக்கு வேலிபோட
ஏனிந்த மௌனமென பொறுத்திருந்துபார்
நாளைக்கு நீ எம் எல்லையில் காவல்நிற்பாய்.
புலிக்கொடி வானில் பறந்து
வான்முகிலை அதட்டிப்பேசும்
இடிமின்னலும் அடங்கிப்போகும்
நாம் காத்திருப்பது காலத்தின் பிச்சைக்காகவல்ல.
எம் தலைவனின் வார்த்தைக்காக. அவன்
வார்த்தை எம் சுதந்திரத்தின் திறவுகோல்
அதுவரை நாம் ஓய்வதுமில்லை சோர்வதுமில்லை.
இது தமிழ்த்தாய் மண்மீது உறுதி.
புவியாதவன்
0 comments: